Author Archive

250. தாண்டவராயன் கதை

by

சிங்கப்பூர் நூலகங்களில் படித்த புத்தகம் – 4 நான் படித்த தமிழ்ப் புதினங்களில் தாண்டவராயன் கதை போல் இனிதாவதறியோம். இதுவெறும் புகழ்ச்சியில்லை. உண்மை நண்பர்காள்! அச்சாகும் புதினங்கள் பெரும்பாலும் புராணங்களை மீளுருவாக்கம் செய்கின்றன அல்லது பகடி செய்கின்றன. குடும்பக் கதை சொல்வதாக சாதியைத் தூக்கிப்பிடிக்கின்றன. வரலாற்றின்… Continue reading

247. The Colours of Our Memories

by

குஜராத்திலோ உத்திரப் பிரதேசத்திலோ மத்தியப் பிரதேசத்திலோ ஒரு சதுரச் செயலாளரிடம் கூட சொல்ல முடியாதென்பதால், அமெரிக்கா போய், உலகெலாம் குண்டு போடும் அந்நாட்டு அதிபரை வழிமறித்து நிறுத்தி, ‘என் பெயர் கான். நான் தீவிரவாதியல்ல’ என்று ஒரு திரைப்படத்தில் ஷாருக்கான் சொல்வார். நானும் இக்கதையைச் சொல்ல… Continue reading

246. கொற்கை

by

சிங்கப்பூர் நூலகங்களில் படித்த புத்தகம் – 3 சிங்கப்பூரின் நிலவமைப்பைப் புரிந்து கொள்ள வழிபாட்டுத்தலங்கள் நூலகங்கள் என்று விடுமுறை நாட்களில் சுற்றித் திரிந்தபோது, மொத்தம் 16 நூலகங்களில் கொஞ்சம் கொஞ்சமாக படித்து முடித்த புத்தகம் இது. அதாவது 16 தனித்தனி புத்தகங்கள். பத்தாண்டுகளுக்குப் பின் நான்… Continue reading

245. சொர்க்கபுரம்

by

சிங்கப்பூர் நூலகங்களில் படித்த புத்தகம் – 2 இது வயது வந்தவர்களுக்கான புதினம். ஒரு குடும்பத்தின் வீழ்ச்சியென சொர்க்கபுரத்தின் வீழ்ச்சி சொல்லும் புதினம் இது. ஓரினச் சேர்க்கையாளர்கள், பாலியல் தொழில் புரிபவர்கள் பெரும்பாலும் கதை மாந்தர்களாக அமைந்த புத்தகம் இது. ஆபாசப் படங்களில் பார்க்கும் பெரும்பாலான… Continue reading

244. செவியன்

by

சிங்கப்பூர் நூலகங்களில் படித்த புத்தகம் – 1 வேலைக்காக சிங்கப்பூர் வந்து ஐந்து மாதங்கள் ஆகப்போகிறது. கிட்டதட்ட எல்லா மதங்களின் தலங்களுக்கும் போய்விட்டேன். இத்தீவில் ஆர்ப்பரிக்கும் கடல் கிடையாது. திரையரங்குகள் நுலகங்கள் மட்டுமே விடுமுறை நாட்களில் இச்சிறிய நாட்டில் என்னைச் சுறுசுறுப்பாக வைத்திருக்க முடியும் என… Continue reading

243. ஆதிப்பழி

by

வியட்நாம் நாட்டைத் தனியாக சுற்ற முடிவானபிறகு, கேள்விப்பட்டிராத ஒரு புத்தகத்தைப் பயணத்தில் படிக்க வேண்டுமென முடிவெடுத்து, புத்தகக் கடையில் நீண்ட தேடுதலுக்குப் பின் முடிவான புத்தகம் இது. ‘பூ’ திரைப்படத்தில் தங்கராசின் பணக்கார மாமனாராக நடித்திருப்பவர்தான், இப்புத்தகத்தின் ஆசிரியர். மொத்தம் 14 சிறுகதைகளின் தொகுப்பு. 8… Continue reading

242. தமிழகத்தில் சாதிகள் – சாதிக்கலப்பும் புதிய சாதிகள் உருவாக்கமும்

by

சாதிகளைப் பற்றிய பல புத்தகங்களில் இது சற்று வித்தியாசப்படுகிறது. முனைவர் பட்டத்திற்கு ஆசிரியர் செய்த ஆய்வுகளின் சில பகுதிகளே இப்புத்தகம். எச்சார்பும் இல்லாமல் சாதிகளைப் பற்றிய ஆவணமாக மட்டும் அமைகிறது. நாம் படித்த சங்க இலக்கியப் பாடல்களை எல்லாம் உற்றுக் கவனித்தால், ஐந்து திணைகளில் ஒவ்வொன்றிலும்… Continue reading

241. ஞானக்கூத்தன் கவிதைகள்

by

சிவனுக்கும் விஷ்ணுவுக்கும்தலைக்கொன்றாகச்செங்கல்லில் கோயிலுண்டுவிழாக் கொண்டாடும்திருமடங்கள் எட்டுண்டுஉன்னை என்னைவாய்பொத்தச் செய்கின்றபேரான்மாக்கள் இல்லங்கள்சில உண்டுகடைகள் உண்டுஆறுண்டு திருக்குளமும்பிறவும் உண்டுமலங்கழிக்க நான் போகும்வழியின் ஊடே ஊர்புகழும் மார்கழியைஏன் டிஸம்பர்கைவிட்டுப் போகிறது அறியாமையின் எல்லைஇங்குதான் முடிகிறதென்றுபலகையில் ஒரு கந்தர்வன்எழுதிக் கொண்டிருந்தான்அதை எங்கே வைக்கப் போகிறான் என்பதுஅவனே அறியமாட்டான் திண்ணை இருட்டில் எவரோ… Continue reading

240. காதுகள்

by

Oliver Sacks. உங்களுக்கு ஆலிவர் சாக்ஸ் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஹைதராபாத் நகரின் பழைய புத்தகக் கடைகளில், ஒருமுறை அவரது புத்தகம் ஒன்றைப் பார்த்து வாங்கி வந்தேன். Hallucinations. பிரமைகள். ஒரு கட்டுரை தான் படித்தேன். அப்படியே மூடி வைத்துவிட்டேன். Second year syndrome! படித்தறிய விரும்பும்… Continue reading

239. அறம் – உண்மை மனிதர்களின் கதைகள்

by

உள்ளூரில் இப்படியொரு கிறுக்கன் இருக்கிறான் என எப்படியோ அறிந்து, என்னைத் தொடர்பு கொண்டார் அப்புதிய நண்பர். என் வீட்டிற்கு வந்துபோன என் நெருங்கிய நண்பர்களுக்கு எல்லாம் இல்லாத ஓர் ஆவல் அப்புதிய நண்பருக்கு. என் புத்தக அலமாரியைப் பார்க்க வேண்டும் என்றார்! முழுவதும் அலசியபிறகு, Sam… Continue reading

238. SHERLOCK HOLMES

by

அந்த வருடம் நான் பார்த்த ஒரு தமிழ்த் திரைப்படத்திலும், ஒரு தெலுங்குத் திரைப்படத்திலும் Inspired by என்று தொடங்கினார்கள். இப்படியாக இதுவரை உலகிலேயே அதிகப்படியாக திரைமயமாக்கப்பட்ட கதாப்பாத்திரமான ஷெர்லாக் ஹோம்ஸ். அவ்விரு திரைப்படங்களும் முழுக்க முழுக்க நவீன தொழில்நுட்பத்தில் துப்பறியும் கதைகள். 100 வருடங்களுக்கு முந்தைய… Continue reading

236. பேட்டை

by

பேட்டை. சிந்தாதிரிப்பேட்டை. சின்னதறிப்பேட்டையில் ரூபன் என்ற கதைநாயகனைச் சுற்றி நடக்கும் சம்பவங்களே இப்புதினம். இது மத்திய சென்னையின் கதை. அரசியல் சினிமா ரவுடியிசம் என்ற வழக்கமான சென்னை கதையில்லை. கேரம், கானாப்பாட்டு, ஹவுஸிங் யூனிட், அவ்வளவு கெட்ட வார்த்தைகள் என்ற வழக்கமான சென்னை சமாச்சாரங்களும் உண்டு.… Continue reading

235. கந்தர்வன் கதைகள்

by

கந்தர்வன் என்பவரின் சிறுகதைகளைப் படித்தேன், அவரின் அனைத்துச் சிறுகதைகளையும் படிக்கப் போகிறேன் என்று இதே தளத்தில் சொல்லியிருந்தேன். அறுபத்தியொரு கதைகளையும் படித்துவிட்டேன். எந்தக் கதையிலும் புனைவு இல்லை; வார்த்தை ஜாலங்கள் இல்லை; ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையில் அந்தரங்க வேலைகள் இல்லை; கெட்ட வார்த்தைகள் அறவே இல்லை.… Continue reading

234. ஒரு சகலகலா சவரக்காரன் பராக் பராக் …

by

நீதான் வெட்டணும்நீயேதான் மீசை வைக்கணும்உங்கப்பனைவிட நீயே சூப்பர் டக்கருன்னுபிஞ்சுமனசுல நஞ்ச விதைப்பார்கள்நம்பிடாத மகனே பதினைந்து வயதில்என்னை படிப்பை இழக்கச் செய்ததுஇதே உசுப்புதான்இதே பசப்புதான் மலக்குழியில் இறங்கிமலமள்ளுவதற்கு ஈடானதுஉன் அக்குள் குழியிலுள்ளமசுரை மழிப்பது ஆளுயர கண்ணாடிமுன்ஆற அமர அமர்த்திமழமழவென வழவழவெனபார்த்துப் பார்த்துகேட்டுக்கேட்டு செய்யும் என்னைஅரை அமட்டன் என்கிறாய்… Continue reading

233. நிறங்களின் உலகம்

by

புத்தகக் கண்காட்சிகளில் நான் தவிர்க்கும் பதிப்பகங்களில் ஒன்று விகடன். அதையும் மீறி இப்புத்தகம் என் கைகளுக்கு வந்திருந்தாலும், புரட்டிப் பார்த்துவிட்டு, இன்னொரு வெகுஜனப் புத்தகம் என்று புறக்கணித்திருக்க வாய்ப்புண்டு. பதிப்புரை என்னுரை முன்னுரை என்று நண்பர்களை நண்பர்களே புகழ்ந்து கொண்டு, புத்தகங்களின் பக்கங்களை வெறுமனே நிரப்பி,… Continue reading

232. நிறங்களின் மொழி

by

புத்தகக் கண்காட்சிகளில் நான் தவிர்க்கும் பதிப்பகங்களில் ஒன்று விகடன். அதையும் மீறி இப்புத்தகம் என் கைகளுக்கு வந்திருந்தாலும், புரட்டிப் பார்த்துவிட்டு, இன்னொரு வெகுஜனப் புத்தகம் என்று புறக்கணித்திருக்க வாய்ப்புண்டு. பதிப்புரை என்னுரை முன்னுரை என்று நண்பர்களை நண்பர்களே புகழ்ந்து கொண்டு, புத்தகங்களின் பக்கங்களை வெறுமனே நிரப்பி,… Continue reading

231. கூட்டுவிழிகள் கொண்ட மனிதன்

by

உலகக் குப்பைகள் பசிபிக் பெருங்கடலில் ஒரு தீவாகச் சுற்றிக்கொண்டு இருக்கின்றன என படித்திருப்பீர்கள். பூச்சியினங்களில் கூட்டுவிழிகள் என்ற அமைப்புண்டு. இவ்விரண்டு விடயங்கள் தான் என்னைக் கடைசிவரை படிக்க வைத்தன. மாய எதார்த்தம், திமிங்கல வேட்டை, மலை குடைதல், மலையேற்றம், பழங்குடிகள், கடல், பிளாஸ்டிக் குப்பைகள் என… Continue reading

230. பிரபல கொலை வழக்குகள்

by

செய்திகளை இணையத்தில் மட்டுமே படிக்கும் வழக்கம் உடையவன் நான். ஊரடங்கு காலத்தில் செய்திகளைத் தாள்களிலும், காட்சி ஊடகங்களிலும் பார்க்கிறேன். ஒருநாள் தாமதமாக வந்தாலும், செய்தித்தாள்களில் உள்ள செய்திகள் பெரும்பாலும் முழுமையற்ற தகவல்களுடன் தான் வருகின்றன. சென்ற வாரம் தீர்ப்பான உத்ரா கொலை வழக்கு ஓர் உதாரணம்.… Continue reading

229. இந்தியாவை உலுக்கிய ஊழல்கள்

by

ஐந்தில் நகராததுஐம்பதில் நகரும்அரசுக்கோப்பு! போபர்ஸ், 2 ஜி, மாட்டுத் தீவனம், நிலக்கரி, வியாபம் என 16 ஊழல்களின் புத்தகம் இது. மத்தியில் நடந்த செயின்ட் கீட்ஸ் ஊழல், மாநிலத்தில் நடந்த பூச்சி மருந்து ஊழல் பற்றி உங்களுக்குத் தெரியாதெனில், நீங்கள் கண்டிப்பாக படித்துப் பெருமை கொள்ள… Continue reading

228. அன்று வேறு கிழமை

by

பெண்ணுடன் சினேகம் கொண்டால்காதறுந்து போகும் என்றாய் தவறுகள் செய்தால் சாமிகண்களைக் குத்தும் என்றாய் தின்பதற் கேதும் கேட்டால்வயிற்றுக்குக் கெடுதல் என்றாய் ஒருமுறத் தவிட்டுக்காகவாங்கினேன் உன்னை என்றாய் அத்தனைப் பொய்கள் முன்புஎன்னிடம் சொன்னாய் அம்மா அத்தனைப் பொய்கள் முன்புசொன்னநீ எதனாலின்றுபொய்களை நிறுத்திக் கொண்டாய் தவறு மேல் தவறு… Continue reading

227. ELEPHANTS CAN REMEMBER

by

கிட்டதட்ட 15 ஆண்டுகளுக்கு முன் கணவனும் மனைவியும் நடைப்பயிற்சி சென்றபோது, அவர்களின் சொந்த துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்து போகிறார்கள். இருவரின் கைரேகைகளும் இருந்ததால், மனமொத்த விவாகம், மனமொத்த விவாகரத்து போல, மனமொத்த தற்கொலை, அதாவது இரட்டைத் தற்கொலை என காவல்துறை முடித்துக் கொள்கிறார்கள். ஷேக்ஸ்பியரின் கதாப்பாத்திரத்தில்… Continue reading

  • Follow புத்தகம் on WordPress.com